முகப்பு தொடக்கம்

மென்னிழற் றருவை யாடைபவர் தம்மை
      விடாநிழல் விட்டிடு மாபோல்
நின்னடிக் கமல மடைந்திடிற் றொடர்ந்து
      நீங்கலா வினையுநீங் குறுமே
கன்னலிற் கனியிற் சுவைதரு மமுதே
      கண்மணி யேயருட் கடலே
என்னுயிர்த் துணையே யென்கரத் திருக்கு
      மீசனே மாசிலா மணியே.
(2)