|
மெய்தயங் கரிசனம் பூசிவெந் நீராட்டி விழியூதி மெய்துடைத்து விரனிலந் தைவந் திடும்பொட்டின் மீதுலையின் வெண்ணீ றணிந்துவிழியில் மைதயங் குறவெழுதி யியல்பாகு மக்கமணி வடமணிந் தம்பொனரைஞாண் மணியரிக் கிண்கிணி சதங்கைபொற் றண்டைகள் வனைந்துபொற் றொட்டிலுய்த்தே எய்தவந் துறுபெருஞ் செல்வமே யமையாத வின்சுவைத் தெள்ளமுதமே யென்னுயிர்த் துணையாய மாணிக்க மதலையே யென்றுசீ ராட்டியன்பால் செய்தவம் பெருகுமம் மவைவளர்க் குங்குழவி செங்கீரை யாடியருளே திமிரமல மகலவரு சிவஞான மாமுனிவ செங்கீரை யாடியருளே.
|
(6) |
|