முகப்பு
தொடக்கம்
பாங்கி யென்னைமறைப்பதென்னெனத்தழால்
மேலிலை யென்ன வுயர்ந்தார் திருவெங்கை வெற்பிலுள
மாலிலை யென்ன வெனைமறைத் தாய்திரு மாலுறங்கும்
ஆலிலை யன்ன வயிற்றணங் கேயருந் தாய்க்கொளித்த
சூலிலை நெஞ்சறி யாவஞ் சகமிலைச் சொல்லுதற்கே.
(124)