|
மொண்டுபொய்ப் பொருளென்று பொருளையிர வலர்வரின் முத்திரைசெ யாமலுதவி முழுமறைப் பொருளைமெய்ப் பொருளென்று தொண்டர்க்கு முத்திரைசெய் தீங்கருள்வது விண்டுமது மடைதிறந் தொழுகுபைங் கொன்றைபுனை விரிசடைக் கற்றைநெற்றி விழியுடை யவர்க்கலது குவியாத திலையென்று விரியாத தேதிலார்முன் கொண்டவெம் பவநீறு படநீறு தன்னைக் கொடுப்பது நடுங்கவாவி கொள்ளைகொண் டுண்ணவெம் பால்வருங் கொடியவெங் கூற்றைத் தடுப்பதாய தண்டளிர் கவற்றுநின் கையினா லையநீ சப்பாணி கொட்டியருளே. தனையறியு மறிவையறி வென்றசிவ ஞானியே சப்பாணி கொட்டியருளே.
|
(2) |
|