முகப்பு தொடக்கம்

மொய்த்தபுழு வாகமுயிர் புத்திமன மாயா
       முற்றுமற வேமறைமு டிக்குமணி யாமா
தத்தொமசி யாகியப தப்பொருளி னாலே
       தக்கசிவ னீயெனவு ணர்த்தியது தானா
வைத்தநின தாள்படுமி துற்றடிமை யாவே
       மைக்கண்மணி யூடுபடு தற்குநிக ராமே
சித்திகள் வழாவொருவ சிற்றில்சிதை யேலே
       சிட்டசிவ ஞானமுனி சிற்றில்சிதை யேலே.
(10)