முகப்பு தொடக்கம்

 
பாங்கி கையுறைமறுத்தல்
மல்லார்க்குந் தோளண்ணலேவெங்கை வாணர் வரையிற்பெண்கள்
எல்லார்க்கும் வந்த விடைபோல்வ தன்றிங் கிவட்கன்றியே
வில்லார்க்கு நின்னணி கொங்கையிற் காணிலெம் வேடரென்னும்
பொல்லார்க்கு றங்கும் புலிவா யிடறுதல் போன்றிடுமே.
(101)