முகப்பு தொடக்கம்

 
பிறர்வரைவுணர்த்தல்
மகவா னிறைஞ்சுந் திருவெங்கை வாணர் வரையணங்கின்
முகவா ரிசமு முலையுங்கண் டான்மிகு மோகமுறுஞ்
சகவாழ் வினரை யுரைப்பதென் யான்மறை சாற்றுகின்ற
சுகவாம தேவரு மின்றே விடுவர் துறவினையே.
(235)