முகப்பு
தொடக்கம்
வெள்ளணியணிந்துவிடுத்துழித் தலைமகன்வாயில்வேண்டல்
மலைமகள் பங்கர் திருவெங்கை வாணர் மணிவரைமேல்
அலைமக ளென்ன வருமட வார்வெள் ளணியணிந்து
கலைமக ளென்ன வடைந்தன ராலினிக் கானவர்தந்
தலைமகண் மெய்ந்நலங் காண்பா னெனையார் தருபவரே.
(390)