முகப்பு தொடக்கம்

 
வெள்ளணியணிந்துவிடுத்துழித் தலைமகன்வாயில்வேண்டல்
மலைமகள் பங்கர் திருவெங்கை வாணர் மணிவரைமேல்
அலைமக ளென்ன வருமட வார்வெள் ளணியணிந்து
கலைமக ளென்ன வடைந்தன ராலினிக் கானவர்தந்
தலைமகண் மெய்ந்நலங் காண்பா னெனையார் தருபவரே.
(390)
Siva prakasa panuval thirattu
முகப்பு தொடக்கம்

 
தலைவிநெய்யாடியதிகுளைசாற்றல்
மையா டியதடங் கண்ணா ளொருநன் மகவுயிர்த்து
மெய்யா டியதிரு வெண்ணீ றழகர்தம் வெங்கையிலே
செய்யா டியநல் வலம்புரி யீன்ற செழுமணிபோல்
நெய்யா டினணல் வினைப்பயன் மேவு நெடுந்தகையே.
(391)