முகப்பு தொடக்கம்

மரணமும் பிறவித் துயருநீங் குறநூல்
      வாய்ச்சிலம் பிக்கருள் புரிந்த
கருணியென் றுனைவந் தடைந்தன னினிநின்
      கருத்தினை யின்னதென் றறியேன்
முரணிபம் பரூஉக்கை தலைமிசை யெடுப்ப
      முழைக்கரும் பாம்பென மணித்தேர்த்
தரணியுள் வெருவி யகன்றிடுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(69)