முகப்பு தொடக்கம்

மங்கையர் பாரக் கொங்கையங் குவட்டு
      மதர்விழிக் கடலினு மளகக்
கங்குலி னூடுஞ் சென்றவென் மனத்தைக்
      கதியிடை நடத்துமா றெளிதோ
செங்கதிர் காலை மாலையுந் தங்கச்
      சிலம்புள வெனக்கடும் பகலில்
தங்குற நீடி நின்றிடுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(84)