முகப்பு தொடக்கம்

யாவுமா முமையுண் ணாமுலை முலைப்பா
      லீந்துபா டச்செயா யெனினும்
மேவுமா துயர்செய் சூலைநோ யெனினும்
      விடுத்துநிற் பாடுமா றருளாய்
ஓவுமா னலது தொல்லுருக் கொளின்வே
      றொன்றெடுத் திடுமென நினைந்து
தாவுமா னினமெண் ணிகந்தசூழ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(32)