முகப்பு தொடக்கம்

யாவர்யா வருமெழுங் கனவிருள் விழுங்குமோ
       ரிரவியைத் தத்தமக்கிங்
கெதிரென்று புகல்கின்ற தென்னவிவ் வுலகில்வரும்
       யாவருந் தத்தமக்கு
மேவுமா ரருளுடைய னென்னவரு மவிரோதி
       விரிசுடர் விளக்கொன்றுதான்
விழையவொரு கம்பத்து மிசையிருந் தகமெலாம்
       விரிகதிர் பரப்புமதுபோல்
ஓவிலயா வண்புகழ்க் கதிரொளியை வெண்டிரைய
       வோதையங் கடலுடுத்த
வுலகெலா மொருமயிலை வரையிருந் தொளிர்விக்கு
       மொருவமா முதறடிந்த
தேவர்சே னாபதியொ டுற்றிருந் தெனையாளி
       சிறுதே ருருட்டியருளே
சிவசமய குலதிலக சிவஞான மாமுனிவ
       சிறுதே ருருட்டியருளே.
(3)