முகப்பு
தொடக்கம்
பாகனொடுசொல்லல்
வார்கொண்ட மென்முலை யாளிடை யேபோய் வருவலென்னுங்
கார்கொண்ட வென்னிடை யில்லைபொய் யென்னக் கடுக்கைநறுந்
தார்கொண்ட செஞ்சடை யார்வெங்கை வாணர் தடஞ்சிலம்பிற்
றேர்கொண்ட சீர்வல வாவிரைந் தேகச் செலுத்துகவே.
(277)