முகப்பு தொடக்கம்

 
மேற்படி வேறு
வார்கொண்ட களபமுலை யுமைகணவன்
       றிருவெங்கை மகிழ்ந்த தேவே
ஏர்கொண்ட வுனதுமா ணிக்கமலைக்
       கருங்கொடியை யெரிப்ப தென்கொல்
கார்கொண்ட பசுங்காவின் மாவினிருந்
       தெங்கணமர் கடிய வந்தப்
போர்கொண்ட மதவேள்வந் துறக்கூவுங்
       கருங்குயிலைப் பொடித்தி டாதே.
(85)