முகப்பு தொடக்கம்

வாம்பரி கரிதேர் சிவிகைபொற் குவியன்
      மணிப்பணி பெரும்புவி யாட்சி
ஆம்பரி சலவென் றுன்பத மருவி
      னன்றியென் கவிகளென் கவிகள்
காம்பரி முரண்மும் மதகரி வளைத்த
      கைவிட மோதலாற் கதிர்த்தேர்த்
தாம்பரி துணுக்கென் றீர்த்திடுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(51)