முகப்பு
தொடக்கம்
வாத்திய முழங்கச் சிவிகையுங் கரியு
மாறியூர்ந் துலவிவாழ்ந் தவரும்
ஏத்திய மொழியோ டிரக்கையா னின்குற்
றேவலே வாழ்வென வறிந்தேன்
பாத்திய மணிகள் கொண்டிழைத் திலங்கும்
பாரவா சிகைமணி மேகஞ்
சாத்திய தெனவில் வளைந்துறுஞ் சோண
சைலனே கைலைநா யகனே.
(61)