|
வாங்கு சிறுவெண் மதிக்குழவி வயங்கு முடியு மகன்மாள மலர்ந்த விழிசேர் திருநுதலு மதிநேர் சங்கக் குழைப்பணியே தாங்கு செவியுங் கடற்காளந் தரித்த மிடறுங் கனன்மழுமான் றயங்கு கரமுந் தனிக்கேழற் றடங்கோ டிமைக்குந் திருமார்பும் ஓங்கு சிவவெம் புலியதளொன் றுடுத்த வரையு மான்மலர்க்க ணுற்ற வடியு நினதுண்மை யுணரா வஞ்சஞ் செயக்கருணை தேங்கும் விழிக ளேயதனைச் செய்யா தாலோ தாலேலோ தேடற் கரிய சிவஞான தேவே தாலோ தாலேலோ.
|
(5) |
|