|
பதினான்குசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் |
|
வாரியங் கரையீர் வாளிலைக் கைதை மலரெனத் தோன்றுவர் சிலர்தாம் மதுரவீர்ங் கரும்பின் மலரெனச் சிலர்தாம் வருவர்நீ கற்பக மலர்போல் காரியங் களத்த னடஞ்செய்தா மரையின் கழலொளி யாவுமூர் போகி கண்களாற் கண்டு கேட்டுமூர்ப் பச்சைக் கந்தமா முனிகரத் துதித்தாய் வேரியங் கமலத் தாளிழை மருங்குன் மெல்லியற் பெண்ணொரு கம்பம் மேவுற விருமா தங்கமுங் கட்டி விடாதமர் நகர்கணா யகமும் பாரினன் முகமா மிக்கரை முனிந்த பரன்றிரு வக்கரை நகரும் பயிலிட மெனக்கொண் மயிலைவா ழமுத பானமார் ஞானமா தவனே.
|
(50) |
|