முகப்பு தொடக்கம்

 
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
வாங்குசிலை புரையுமுட லெனுங்குளத்தின் மூல
     மலமெனமோர் வெங்கரவின் பகுவாயி னின்றுந்
தீங்கிலுயி ரெனும்பனவக் குலமகனை யாதி
     திரோதாயி யென்னுமொரு வெந்திறற்கூற் றுவனால்
ஓங்குறுநா தாந்தமெனப் பெயரியவக் கரையி
     லுமிழ்வித்துச் சிவமெனுமோர் தந்தையொடுங் கூட்டாய்
கோங்கமுகை கவற்றுமிள முலைப்பரவை மகிழக்
     குண்டையூர் நென்மலைமுற் கொண்டவருட் கடலே.
(11)