முகப்பு தொடக்கம்

 
காதலன்றலைவி மூதறிவுடைமை மொழிதல்
விடுத்த மயலுடை யெம்மான் றிருவெங்கை வெற்பணங்கே
எடுத்த விடைமுறிக் குங்கொங்கை யேயன்றி யென்னையெய்யத்
தொடுத்த குவளைக் கணைவாங்கி வின்மதன் றூணியிட
அடுத்த கடைக்கண்வைத் தாரறி யாமை யறிந்திலரே.
(94)