முகப்பு
தொடக்கம்
பாங்கி தலைவியை யாற்றுவித் திருந்தமைகூறல்
விண்மணி பொய்ப்பினும் பொய்யாநின் வாய்மை விளம்பியெங்கள்
கண்மணி யொத்தசெவ் வேலிறை வாவுயிர் காத்தளித்தேன்
ஒண்மணி கண்டத் தொருவெங்கை வாண ருயர்சிலம்பிற்
பெண்மணி யைப்பிறை வாணுத லீர்ங்குழற் பேதையையே.
(283)