முகப்பு தொடக்கம்

 
தலைமக ளுவகையாற்றா துளத்தொடுகிளத்தல்
வில்லுங் கணையு மதவேளு மாய விழித்தவரெஞ்
சொல்லும் புனையுந் திருவெங்கை வாணர் சுடர்க்கிரிமேற்
கொல்லுந் துயர முலைமேற் பசப்பினைக் கொண்டுநெஞ்சே
செல்லுஞ் செலவை யுணர்த்திய தாமிச் செழுமுரசே.
(287)