முகப்பு
தொடக்கம்
தலைமகள் புலவிதணியாளாகத் தலைமகனூடல்
விரும்பா மறவர் புரமூன் றெரித்தவர் வேணியினில்
அரும்பா மதியொன் றணிந்த பிரான்வெங்கை யன்னவயற்
கரும்பா மொழியென் மடமாதி னுக்கெந்தக் காலமுமிவ்
இரும்பா மனமிலை யாரே வறிதிங் கிருந்தவளே.
(403)