முகப்பு தொடக்கம்

வினையரும் புகலிக் கிறைமணப் பந்தர்
      விருந்தினுக் குதவிலேன் முந்திற்
றுனையிரந் திடுவான் வந்தனன் பதநீ
      யுதவியென் றுயரொழித் தருளாய்
இனியபைந் தமிழின் பொதியமால் வரைபோ
      லிசைக்குரு காதிம மலையின்
தனையையின் றீஞ்சொற் குருகுறுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(26)