முகப்பு தொடக்கம்

விருப்பொடு வெறுப்பு மகன்றுபே ரின்ப
      வெள்ளத்து ளழுந்துநின் னடியார்
திருப்பத மிறைஞ்சி யவர்க்குவே ளாண்மை
      செய்பெருஞ் செல்வமே யருளாய்
பொருப்புக டொறும்வீழ் பொங்குவெள் ளருவி
      போன்றறி விலர்க்கிடை யறாமல்
தரிப்பருங் கருணை பொழிதருஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(33)