முகப்பு
தொடக்கம்
விழைவொடு மறஞ்செய் துய்கவென் றுரைக்கும்
விதியினைக் கவளமுண் கெனவுங்
கழைசுளி நெடுநல் யானையின் முனிந்து
கடக்குமென் பவமொழிந் திடுமோ
மழைமுகில் வந்து தவழ்ந்துவிண் படரு
மலிதரு புகையென வெழுந்து
தழலுரு வுண்மை விளக்குறுஞ் சோண
சைலனே கைலைநா யகனே.
(60)