முகப்பு தொடக்கம்

 
வசவதேவர்

வேறு
விழுப்பநிலை குறிகுணங்க ணாடிடா தென்றும்
       வேண்டுவன வேண்டியாங் களித்தரவே டத்தர்
குழுக்கடமக் கன்புசெய்நந் தலைச்சுமைவாங் குபுதான்
       கொண்டவனென் றரியசிவ ஞானியைக்காத் தளிக்க
விழிப்பினம தொருநாமம் புகல்பவரைப் பிறப்பி
       லெடுக்குநமக் கிஃதரிதன் றெனச்சென்று கடிது
வழுக்கிவிழு பவளையெடுத் தஞ்சலோம் பென்ற
       வசவதே சிகனெனுமெங் குடிமுழுதாள் பவனே.
(7)