முகப்பு தொடக்கம்

வித்து வான்வர வால லாதொரு பிறிதினான்
       மிக்க வாழ்வுபெ றாத வாறென வடியரேம்
அத்து வாமுடி வான நீவரு வரவுதா
       னற்று வேறுள வேது வாலுள மகிழ்வுறேம்
முத்து வாளர வீனு மாமணி மிகுகுவான்
       முற்று மாமதி ஞாயி றாமெனு மயிலைவாழ்
கத்து வாதமி லாத போதகன் வருகவே
       கச்சி வாழ்சிவ ஞான தேசிகன் வருகவே.
(11)