|
விழைவொடு நினக்கு மாதுலன் மாமி வெற்புவேண் டுறாதுதன் மருகன் மேலெலா மெலும்புந் தோலுமாய்க் கிடத்தல் வெறுத்திடா திளமைநா டாது பழமலை தனக்குச் சாதியொப் பெனவே பார்த்துனைக் கொடுத்ததுன் றந்தைப் பனிமலை யென்னோ தன்மனை யாட்டி பயந்திடப் பெறாமக ளென்றோ கழைவரை முன்ன ரூன்றுபு நடந்து கடிதுபள் ளங்களின் வீழ்ந்து கரைகளின் மெல்ல வேறிவெண் ணுரைவாய்க் கடையுற வளைந்துருத் திரைந்து கிழவுரு விருத்த நதியெனப் பட்டுக் கீர்த்திமூ வுலகினும் போர்ப்பக் கிளர்மணி முத்த நதியுடை விருத்த கிரியமர் பெரியநா யகியே.
|
(2) |
|