முகப்பு தொடக்கம்

 
தீங்குங்கிழத்தி பாங்கியர்தமக்குத் தன் செலவுணர்த்தல்
வெறிமேவு கொன்றையம் பூந்தொடை யார்திரு வெங்கைவெற்பில்
கறிமேவு முப்பென வன்பரிற் கூடிவெங் கானகத்தில்
நெறிமேவு மங்கை மகிழ்ந்துசென் றாளென நீருரைமின்
மறிமேவு முண்கண் மடக்கொடி மாதர்க்கு மாதவரே.
(362)