முகப்பு தொடக்கம்

வென்றிவிடை யினர்திருக் காமநா யகர்திரு
       விழாமுற்ற வருண்மாதவர்
வேறுவே றாயதிரு வேடத்தர் நீறுதிமிர்
       மேனியினர் வேணிமுடியர்
துன்றிழை மலிந்தகந் தைச்சுவலர் பட்டுமென்
       றூசுமணி யாரமணிவார்
சூலப் படைக்கலத் தினர்தனித் தவரருகு
       தோகையர்க ளோடுவருவார்
குன்றுறழ் பனைக்கைவெங் கரிசிவிகை யாதிமிசை
       கொள்பவ ரியந்தழங்கக்
கோடிநூ றாயிரவர் மகரா லயத்தொடிகல்
       கொண்டதோர் செயல தென்னச்
சென்றெதிர் முழங்குபொம் மையபட் டினச்செல்வ
       செங்கீரை யாடியருளே
திமிரமல மகலவரு சிவஞான மாமுனிவ
       செங்கீரை யாடியருளே.
(2)