முகப்பு
தொடக்கம்
அருமறை செவிலி யறிந்தமைகூறல்
வேலையி லேவரு நஞ்சமுண் டார்திரு வெங்கைவெற்பில்
மாலையி லேவண் டிசைபாடு மென்குழல் வாணுதலாய்
சோலையி லேநங் கொழுநர்வந் தேகதிர் தோன்றுசிறு
காலையி லேதரு மாலையன் னோவன்னை கண்டனளே.
(213)