முகப்பு தொடக்கம்

வேலையந் துகில்சூழ் மலர்தலை யுலகின்
      மெய்யினைப் பொய்யெனு மவர்க்கே
ஏலவந் தருள்வ தன்றிமெய் யினைமெய்
      யெனுமெனக் கருள்புரிந் திடாயோ
காலநன் குணர்ந்து சினகரம் புகுந்து
      காண்பரி தெனாதுல கனைத்துஞ்
சாலநின் றுழியே கண்டிடுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(11)