முகப்பு
தொடக்கம்
செவிலி கலந்துடன் வருவோர்க் கண்டுகேட்டல்
வேண்டா ருயிர்கவர் செவ்வே லிறைவனு மெல்லியலும்
மீண்டா ரெனவுண் மகிழ்ந்துநின் றேன்மலர் வேதன்முதல்
மாண்டா ரெலும்பணி வெங்கைபு ரேசர் மணிவரைமேல்
தூண்டா விருஞ்சுடர் போல்வரு வீரெதிர் தோன்றுறவே.
(348)