முகப்பு தொடக்கம்

 
எண்சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
வேண்டுவார் வேண்டியதே யீவா னென்னும்
       வியன்றிருநா வுக்கரசின் மாற்றம் பொய்யோ
ஈண்டுவா வென்னைவலப் பாகந் தன்னி
       லிருந்துகென நினைவேண்டி யொழியா மையல்
பூண்டுவார் விழிததும்பு புனலோ டொன்றும்
       பொற்றொடிக்குந் திருவருள்செய் கின்றா யல்லை
நீண்டுவா னுலகளக்கும் பொழில்சூழ் வெங்கை
       நிமலனே யெமையாளு மமரர் கோவே.
(83)