முகப்பு தொடக்கம்

 
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
வேலுடையா னொடுமயிலை மலைமேவு சிவஞானி
       வினைக டீர்க்குங்
காலுடையான் புகழோடு வெள்ளிமலை நிறைநிற்பக்
       கனம்போ தாமல்
பாலுடையான் மிசைவைக்கப் பட்டததன் மேல்வைத்தோன்
       பால்வெண் ணீற்றுத்
தோலுடையா னவன்மீது வைத்ததன்றோ விளமதியஞ்
       சொல்லுங் காலே.
(11)