முகப்பு தொடக்கம்

வேணவா வகன்று நின்றிரு வடியின்
      மெய்ம்மையன் படைந்துபொய்ப் பிறவி
நாணுவா ரினங்கண் டுறும்படி தூய
      ஞானநாட் டம்பெற வருளாய்
சேணுலா மதியந் தவழ்பெருங் குடுமிச்
      சிலம்புகள் சிறுதுரும் பாகத்
தாணுவா யெழுந்து வளர்ந்திடுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(92)