முகப்பு
தொடக்கம்
பாங்கியாடிடம் விடுத்துக்கொண்டகறல்
வயிரோ சனனுக் குலகீந் தவர்வெங்கை மன்னனுக்குப்
பயிரோ டுறவற நீத்தாளென் றெண்ணிப் பழுதுரையல்
செயிரோ சிறிது மிலாக்கிளி காடன் சிறுகுடிலுக்
குயிரோ டரிவை நடந்துசென் றாளென் றுரைமின்களே.
(162)