முகப்பு தொடக்கம்

 
தன்னுட்கையா றெய்திடுகிளவி
வம்புற் றனைவெண் மதியா லொடுங்கினை வண்டிழந்தாய்
அம்புற் றனைமிகு கண்முத் துகுத்தனை யம்புயமே
நம்புற் றரவணி யெம்மான் றிருவெங்கை நாட்டிறையை
வெம்புற் றனையெனைப் போலென்ப தின்று வெளிப்பட்டதே.
(225)