முகப்பு தொடக்கம்

 
இகுளைவம் பென்றல்
வெயிலே யெனமணி கண்டிதழ் கூம்பி விரைக்குவளை
துயிலே புரியுஞ் சுனைவெங்கை வாணர் சுடர்க்கிரியின்
மயிலே யுளங்கவ லேலிது தான்மழை வம்பொடுங்கிக்
குயிலே மருபரு வத்தாற் பொழிதருங் கொண்டலன்றே.
(272)
Siva prakasa panuval thirattu
முகப்பு தொடக்கம்

 
வருகுவர்மீண்டெனப் பாங்கிவலித்தல்
வலையிற் படுகலை கண்டிள மான்பிணை மாழ்கிநிற்கும்
நிலையிற் படர்வனஞ் சென்றனங் காதலர் நெஞ்சுருகிக்
கொலையிற் படுமழு வார்வெங்கை மாதுன் குளிர்தரள
மலையிற் படர்தனம் பீர்மீள மீண்டு வருகுவரே.
(270)