முகப்பு தொடக்கம்

வெண்டிரு நீறு புனையுமா தவர்க்கு
      விருந்துசெய் துறும்பெரு மிடியுங்
கொண்டநல் விரதத் திளைக்கும்யாக் கையுமிக்
      கொடியனேற் கருளுநா ளுளதோ
வண்டுழுங் குவளை மலர்தடஞ் சுனையின்
      மற்றைவா னவர்க்குரித் தன்றிச்
சண்டியுண் மகிழ்ந்து கொளமலர் சோண
      சைலனே கைலைநா யகனே.
(20)
Siva prakasa panuval thirattu
முகப்பு தொடக்கம்

வந்துமா மறலி யெனதுயி ருண்பான்
      மயிலையுண் சிரலினிற் கின்றான்
முந்திநீ யெனையா னந்தவா ரிதியின்
      மூழ்குற விடுத்தருள் புரியாய்
நந்துளான் மலையே யென்றுசா திப்ப
      நனைமலர் வேங்கையு மசோகுஞ்
சந்துமேன் முளைப்பச் செய்துகொள் சோண
      சைலனே கைலைநா யகனே.
(21)