முகப்பு
தொடக்கம்
கைக்கிளை. மருட்பா
வம்புலவு மீர்ங்கோதை வாடுகின்ற தென்மனம்போல்
அம்புவியிற் றோய்ந்த வடித்தா மரையதனால்
செங்கமலை பேதையாச் செய்யு மடந்தையிவள்
வெங்கைநகர் மேவிய விமலன் திருவருளால்
விண்ணின் பெருமையும் வியனீர்
மண்ணின் சிறுமையு மறவரு மணங்கே.
(31)