முகப்பு தொடக்கம்

வண்ட மிழ்ப்பெரும் புலவர்தஞ் செய்யுளின்
       வழுப்படாச் சொல்லோடும்
வழுவ மைத்தசொற் புணர்த்திடு மாறென
       வயங்கிள மதிசூடி
தொண்டு பட்டிடு மயறபு நன்னெறித்
       தொழும்பின ரொடுகூடச்
சுளிவு றாதடி யேன்றனைத் தழுவியே
       தொல்லிசைப் புலவோர்தம்
தண்ட மிழ்த்தொடை புணர்க்கிலா முழுவழுத்
       தாழ்ந்தபுன் சொற்போலச்
சங்க ரன்றிருத் தொண்டில்வேற் றுலகரைச்
       சார்வற வரைந்திட்ட
ஒண்ட ரைத்தனி முகமெனுங் கச்சிய
       னுருட்டுக சிறுதேரே
யுலக வாஞ்சிவ ஞானமா முனிவர
       னுருட்டுக சிறுதேரே.
(7)