|
வம்பு லாமலர்ப் பொழிலிடை யுடைந்துகு மாங்கனிச் சாறோடும் வண்டு ழுங்கடி மலர்முறுக் கவிழ்ந்துபெய் மதுப்பெயர்ப் பெருவெள்ளம் அம்பொன் மாமணிப் பூணிள முகிண்முலை யரிமதர் மழைக்கட்கே ழரிச்சி லம்படி மாதரோ டெழின்மத னாடுறு முதிர்வேனில் பம்பு வான்றிரை யாணர்த்தண் புனலெனப் பாய்ந்துபா லியாற்றோடி பரவை தன்கரு நிறந்திரிந் துப்பறப் பரந்துறும் விழவானும் உம்பர் போற்றிசெய் காஞ்சிமா நகரின னுருட்டுக சிறுதேரே யுலக வாஞ்சிவ ஞானமா முனிவர னுருட்டுக சிறுதேரே.
|
(8) |
|