2431. அருள்வடி வான மருந்து - நம்முன்
அற்புத மாக அமர்ந்த மருந்து
இருளற வோங்கும் மருந்து - அன்பர்க்
கின்ருரு வாக இருந்த மருந்து. நல்ல
உரை: இறைவன் அருளே யுருவாய் அமைந்தவ னென்ப துபற்றி; “அருள் வடிவான மருந்து” என்று கூறுகிறார். சிவஞானம் தோன்றிப் பெருகப் பெருகப் பசுபாசமாகிய இருள் நீங்குவது விளங்க, “இருளற ஓங்கும் மருந்து” என்று இசைக்கின்றார். (1)
|