2459. மூவர்க் கரிய மருந்து - செல்வ
முத்துக் குமாரனை யீன்ற மருந்து
நாவிற் கினிய மருந்து - தையல்
நாயகி கண்டு தழுவு மருந்து. நல்ல
உரை: மூவர், அயன், திருமால், அரன், முத்துக் குமாரன், புள்ளிருக்கு வேளூரிற் கோயில்கொண்டிருக்கும் முருகப் பெருமான். தையல் நாயகி - புள்ளிருக்கு வேளூரில் உமாதேவிக்கு வழங்கும் பெயர்.
நல்ல மருந்திம் மருந்து - சுகம் நல்கும் வைத்திய நாத மருந்து. (29)
|