பக்கம் எண் :

2505.

     கண்மூன் றுடையான் எவன்அவனே
          கடவுள் அவன்தன் கருணைஓன்றே
     கருணை அதனைக் கருதுகின்ற
          கருத்தே கருத்தாம் அக்கருத்தை
     மண்மூன் றறக்கொண் டிருந்தவரே
          வானோர் வணங்கும் அருந்தவராம்
     ....... ......... ......... ...........
          ........... ........... ............... ...........

உரை:

      மூன்று கண்களை யுடையவன் எவனோ அவனே கடவுளாவான்; அவனது அருளொன்றே திருவருளாகும்; அதனை நினைக்கின்ற நினைவே நன்னினைவாம்; மண்ணாசை முதலிய மூன்று ஆசைகளையும் முற்றவும் கெடுத்து அந்நினைவைக் காண்டிருப்பவரே தேவர்கள் வணங்கும் அரிய தவமுடையவராவர் .............. எ.று

இப்பாட்டின் எஞ்சிய பகுதியும், பிற பாட்டுக்களும் இறந்தன..

     (4)