2860. நானதுவாய் நிற்கும்வண்ணம் வெண்ணிலா வே - ஒரு
ஞானநெறி சொல்லுகண்டாய் வெண்ணிலா வே.
உரை: வெண்ணிலவே, நான் அந்தச் சிவமாய் நிற்குமாறு அமைந்த ஞான நெறியை அறிவிப்பாயாக. எ.று.
நான் அதுவாதலாவது - நான் என்னும் ஆன்மா சிவமாந் தன்மை யடைதல். அதற்குரிய நெறி சிவஞானச் செந்நெறி என்பது பற்றி, “ஞான நெறி சொல்லு” என வேண்டுகின்றாள். (14)
|