33. தெண்டனிட்டேன்
சிந்து
பல்லவி
2977. தெண்டனிட்டே னென்று சொல்லடி - சுவாமிக்குநான்
தெண்டனிட்டே னென்று சொல்லடி.
உரை: தோழி, தலைவரிடம் சென்று நான் அவரை வணங்கி வழிபட்டேன் என்று சொல்வாயாக. தெண்டன், வணக்கம்; அடியற்றமரம் போல் வீழ்ந்து வணங்குதல்.
இது தோழியைத் தலைவனிடம் தூதனுப்பும் தலைவி சொல்லுவதாம். (1)
|