பக்கம் எண் :

4291.

     தடையாதும் இல்லாத் தலைவனைக் காணற்கே
     தடையாதும் இல்லைகண் டாய் - நெஞ்சே
     தடையாதும் இல்லைகண் டாய்.

உரை:

     கண்டு வணங்குதற்கும் அவனது அருட் பேற்றுக்கும் யாதொரு தடையும் இல்லாதவன் என்றற்கு, “தடை யாதும் இல்லாத் தலைவன்” என வுரைக்கின்றார். தன்னைத் தடுக்க வல்லவர் ஒருவரும் இல்லாதவன் எனினும் பொருந்தும்.

     (5)